Apr 7, 2009

அல்-ஐன்னில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

அல்-ஐன்னில் 27-03-2009. வெள்ளிக்கிழமை மாலை 7. 15 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்-ஐன் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்.உலக அளவில் தமிழ் பேசும் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந் நிகழ்ச்சி தமிழகத்தில் மட்டுமின்றி வளைகுடா பகுதிகளிலும் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மனித நேயத்தை வளர்த்திடவும், இஸ்லாம் குறித்து தவறாக விளங்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விமர்சிப்பவர்ககளுக்கு இஸ்லாம் பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்தவும் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகின்றது.








மாலை 7. 15க்கு அல்-ஐன்னில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது ஸலீம் அவர்களின் துவக்க உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அதனை தொடர்ந்து டி.என்.டி.ஜே யின் அனைத்து மண்டல அமீரக ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஹாமின் இபுராஹீம் அவர்களின் இஸ்லாம் குறித்த அறிமுக உரையுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியது.

நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பிற மதசகோதரர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்வமாய் தங்களின் கேள்விகளை கேட்டார்கள் தீவிரவாத செயல்களில் உலக அளவில் ஏன் முஸ்லீம்கள் ஈடுபடுகின்றார்கள் ? மறுமைவாழ்வு எனும் பயத்தை ஏற்படுத்தித்தான் கடவுள் நம்பிக்கையை வளர்க்க வேண்டுமா? என்ற முஸ்லீம் அல்லாத சகோதரர்களின் கேள்விகளுக்கு சகோதரர் ஹாமின்இபுராஹீம் அவர்கள் மிகத்தெளிவாக பதிலுரைத்தார்கள். இறுதியாக வளூத்தூர் முஹம்மது ஸலீம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழச்சி நிறைவடைந்தது.

நிகழ்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அல்-ஐன் கிளை தலைவர் முஹம்மது ஸலீம் தலைமையில் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே........

No comments: